கூவத்தூரில் பேரம் நடக்கவில்லை: டிடிவி தினகரன் விளக்கம்

 

கூவத்தூரில் பேரம் நடக்கவில்லை: டிடிவி தினகரன் விளக்கம்

நானும் சசிகலாவும் இருந்தவரை கூவத்தூரில் பேரம் எதுவும் நடைபெறவில்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: நானும் சசிகலாவும் இருந்தவரை கூவத்தூரில் பேரம் எதுவும் நடைபெறவில்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசிய விவகாரத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தபோது, உயர் நிதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டால் கூவத்தூர் தொடர்பான ரகசியங்களை வெளியிடுவேன் என கூறி பரபரப்பை பற்றவைத்தார். 

மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் ஒன்று இருப்பதாகவும் அதனைத்தான் அவர் ரகசியம் என கூறுகிறார் எனவும் கூறப்பட்டது. இதனால் கருணாஸ் மீது டிடிவி தினகரன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கருணாஸின் இந்த பேச்சு கூவத்தூர் அரசியலில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கி வைத்திருக்கிறது எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும். நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை; நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது. குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம் என்றார்.