‘கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி சாப்பிட்ட ஆதாரம் தான் இருக்கும்’ – கருணாஸுக்கு அமைச்சர் பதிலடி

 

‘கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி சாப்பிட்ட ஆதாரம் தான் இருக்கும்’ – கருணாஸுக்கு அமைச்சர் பதிலடி

உயிரே போனாலும் கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என கருணாஸ் கூறியதற்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: உயிரே போனாலும் கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என கருணாஸ் கூறியதற்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலடி கொடுத்துள்ளார். 

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர், அரசை விமர்சிப்பது மட்டுமின்றி கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, “கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் வேண்டுமானால் கருணாஸிடம் இருக்கும். அதைத்தான் அவர் வெளியிடுவேன் என சொல்கிறார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் விரோத திட்டங்களுக்கு அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கியதில்லை என்றும் மக்களை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.