கூட்ட நெரிசலில் சிக்கிய டி.வி பிரபலம்… டாப்ஸை கிழித்த ரசிகர்கள்!

 

கூட்ட நெரிசலில் சிக்கிய டி.வி பிரபலம்… டாப்ஸை கிழித்த ரசிகர்கள்!

இந்தி தொலைக்காட்சி பிரபலம் ஸ்வேதா திவாரி தன்னுடைய வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியாக அளித்திருந்தார். அதில், தன்னுடைய மேலாடையை ரசிகர்கள் பிய்த்துச் சென்றதாக கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி பிரபலம் ஸ்வேதா திவாரி தன்னுடைய வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியாக அளித்திருந்தார். அதில், தன்னுடைய மேலாடையை ரசிகர்கள் பிய்த்துச் சென்றதாக கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

swetha

இந்தி டி.வி பிரபலம் ஸ்வேதா திவாரி. இவர் பல டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். அவர் ரசிகர்கள் பட்டாளத்திடம் சிக்கி பட்ட அவஸ்தை பற்றிய தன்னுடைய பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். 
“Kasautii Zindagii Kay என்னும் சீரியல் நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. ராய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். அப்போது ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டார்கள். கட்டுக்கடங்காத மக்கள் என் மீது விழுந்தார்கள். என்னை தொட்டார்கள். என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அத்தனையையும் மீறி அவர்கள் என்னுடைய மேலாடையை பிடித்து இழுத்தார்கள்.

tiwari

ஒரு கட்டத்தில் என்னுடைய மேலாடை கிழிந்து அவர்கள் கையில் சென்றுவிட்டது. நான் கைகளால் மறைத்துக்கொண்டு என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினேன். எல்லோரும் என்னை காப்பாற்றவே படாதபாடு பட்டார்கள். கடைசியில் பாதுகாவலர்கள் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி என்னை மீட்டு ஒரு காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். 

tiwari

அதேபோல், ஒரு வெப் ஷோ டிரெய்லர் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அதில், என்னுடைய படத்துக்கு ஒருவர் முத்தம் அளிப்பது போல இருந்தது. இதைப் பார்த்து நான் கொந்தளித்துவிட்டேன். வெப்ஷோ தயாரிப்பாளர்களிடம் சண்டைபோட்டேன். அவர்கள் இது வெறும் டிரெய்லர்தான். தவறாக ஏதும் இல்லை என்று சமாதானம் செய்தார்கள். ஆனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அந்த டிரெய்லரை என்னுடைய மகளுக்கு அனுப்பினேன். எப்படி இருக்கிறது என்று சொல் என்றேன். அதைப் பார்த்து நன்றாக உள்ளது, சூப்பர் என்ற அவள் எக்சைட் ஆனாள். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதியானது” என்று கூறியுள்ளார்.

tiwari

தமிழ்நாட்டில் டி.வி, சினிமா பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர்களைப் பார்க்கவே கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிடுகிறது. தமிழக ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு வடக்கில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது ஆறுதலை அளிக்கிறது!