கூட்டிக் கொடுத்து அரசு ஒப்பந்தங்களை பெற்ற பெண் ! ஏழை மாணவிகளை குறிவைத்து கோடீஸ்வரியான பெண் கைது !

 

கூட்டிக் கொடுத்து அரசு ஒப்பந்தங்களை பெற்ற பெண் ! ஏழை மாணவிகளை குறிவைத்து கோடீஸ்வரியான பெண் கைது !

விருதுநகரை போலவே மத்திய பிரதேசத்திலும் நிர்மலா தேவி ஒருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

விருதுநகரை போலவே மத்திய பிரதேசத்திலும் நிர்மலா தேவி ஒருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

Nirmala devi

கல்லூரி மாணவிகளை, பெண்களை அதிகாரிகளின் இச்சைக்கு இரையாக்கி கோடீஸ்வரி ஆகிவிட்டார் ஒரு பெண்.மத்திய பிரதேசத்தில் தன்னுடைய அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பெண் மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக மாநகராட்சி ஊழியர் புகார் அளித்திருந்தார்.

அவர் கொடுத்த புகாரில் விசாணை மேற்கொண்ட போலீசார் ஸ்வேதா ஜெயின் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பணக்காரர்களின் காம இச்சைக்கு கல்லூரி மாணவிகள், பெண்களை அனுப்பி வைத்து பணம் சம்பாதிப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சிகளை வீடியோ எடுத்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டி தன்னுடைய வேலைகளை சாதித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஓட்டுநர், பெண்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் 4,000த்திற்கும் அதிகமான பாலியல் வீடியோக்கள் இருந்துள்ளது. குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிட முடிவெடுத்த ஸ்வேதா ஜெயின் கல்லூரி மற்றும் வறுமையில் சிக்கும் பெண்களை குறிவைத்து மூளைச் சலவை செய்து அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைப்பார். பின்னர் அதற்கேற்ற பணம் வாங்கி கொள்வார்.

Swetha jain

அதாவது ஸ்வேதா ஜெயினுக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கம் அல்ல. அரசியல்வாதிகளிடம் இருந்த கோடிக் கணக்கான அரசு ஒப்பந்தங்களை பெறுவதும்தான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவியும் வாங்கித் தந்துள்ளார். 24 மணிநேரமும் பாலியல் தொழில் செய்வதற்கு ஏதுவாக 40 பெண்களை கைவசம் வைத்திருந்துள்ளார் ஸ்வேதா ஜெயின். 4,000 வீடியோக்களில் உள்ள காட்சிகளில் பல அரசியல்வாதிகள் இருப்பதால் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.