கூட்டம் நடக்கும் போது அதிகாரிகளுக்கு டீ, காபி உண்டு! பிஸ்கட் கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

 

கூட்டம் நடக்கும் போது அதிகாரிகளுக்கு டீ, காபி உண்டு! பிஸ்கட் கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

இனி நடைபெறும் கூட்டங்களில் பிஸ்கட்டுக்கு பதில் வறுத்த பருப்பு வகைகள், ட்ரை புரூட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தனது அமைச்கத்தின்கீழ் உள்ள அனைத்து துறைகளுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக ஒரு துறையின் அரசு அதிகாரிகள் கூட்டம் நடக்கும்போது, காபி, டீயோடு பிஸ்கட் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று. வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டா அதிகாரிங்க  எப்படி  முடிவா எடுப்பாங்கன்னு அரசு நினைச்சுதோ என்னவோ தெரியவில்லை. மத்திய சுகாதாதர துறை அமைச்சகம் பிஸ்கட்டுக்கு பதில் நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

டீ, பிஸ்கட்

மத்திய சுகாதார துறை அமைச்சகம் தனது கீழ் உள்ள அனைத்து துறைகளுக்கும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: துறை கேண்டீன் வாயிலாக இனி பிஸ்கட் வழங்கப்படாது. இனி துறை கூட்டங்கள் நடக்கும் போது அரசு அதிகாரிகளுக்கு வறுத்த பருப்புகள், ட்ரை புரூட்ஸ், பாதாம், டேட்ஸ், வால்நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமே பரிமாற வேண்டும். மேலும், கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த கூடாது. மத்திய சுகாதார துறை அமைச்சரும், தகுதிவாய்ந்த மருத்துவருமான ஹர்ஷ் வர்தன் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹர்ஷ் வரதன்

வால்நட்ஸ், பாதாம் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு, விட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ஸை கொடுக்கின்றன. பேரீச்சம்பழம் (டேட்ஸ்) உடலுக்கு அதிக கலோரி கொடுக்கும். ஆக இனி நடைபெறும் கூட்டங்களில் சுகாதார துறை அதிகாரிகளுக்கு நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் கிடைக்கும். அதனால இனி கூட்டங்களுக்கு மட்டம் போடாம சுகாதார துறை அதிகாரிகள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள் என நாம எதிர்பார்க்கலாம்.