கூட்டமாக வந்து கெடுத்தார்கள் -குடும்பத்தோடு வந்து சமாதானம் பேசினார்கள் -இறுதியில் நடந்த சோகம் .

 

கூட்டமாக வந்து கெடுத்தார்கள் -குடும்பத்தோடு வந்து சமாதானம் பேசினார்கள் -இறுதியில் நடந்த சோகம் .

தன்னை பலாத்காரம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு வந்த மிரட்டலால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் .

கூட்டமாக வந்து கெடுத்தார்கள் -குடும்பத்தோடு வந்து சமாதானம் பேசினார்கள் -இறுதியில் நடந்த சோகம் .

உத்தரபிரதேசத்தின் சம்பலில் வசிக்கும் 22 வயதான பி.ஏ மாணவி,சம்பலில் உள்ள பஜ்ஜோய் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள அவரது வீட்டில் அவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் .ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த அந்த மாணவி ஒரு பள்ளியில் டீச்சராகவும் வேலை பார்த்து வருகிறார் .அந்த டீச்சரை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வாலிபர் கூட்டம் பலாத்காரம் செய்தது .பின்னர் அந்த கூட்டம் அந்த காட்சியை வீடியோவும் எடுத்தது .பின்னர் அந்த கூட்டத்தினர் , அந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காமித்து  ,இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இதை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் .

ஆனால் கடந்த ஜனவரி மாதம்  அவர் தைரியத்தைத் திரட்டி, தனக்கு நேர்ந்த பலாத்கார  சோதனையை தனது குடும்பத்தினரிடம்  விவரித்தார். இதையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள் .அவர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்  கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சிறையிலடைக்கப்பட்டார் .அதன் பின்னர் அந்த குற்றவாளியின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் வந்து சமாதானமாக போய் விடுமாறும் ,வழக்கை வாபஸ் பெருமாறும் கூறினார்கள் .அதற்கு அந்த பெண் சம்மதிக்காததால் அவர்கள் அந்த பெண்ணை மிரட்ட தொடங்கினாரகள் .இதனால் அந்த பெண் கடந்த வாரம் வியாழக்கிழமை அவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இது பற்றி தகவலறிந்த போலீசார் ,தற்கொலை செய்து கொண்டவரின் உடலை  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள் . இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

கூட்டமாக வந்து கெடுத்தார்கள் -குடும்பத்தோடு வந்து சமாதானம் பேசினார்கள் -இறுதியில் நடந்த சோகம் .