கூட்டத்தை கூட்டி தொழுகையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு!

 

கூட்டத்தை கூட்டி தொழுகையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிய உள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல, சமூக இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

tn

இந்நிலையில் கோவை பெரியகடை வீதி அருகே இருக்கும் இரண்டு இடங்களில் கொட்டகை அமைத்து 30கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெரியகடைவீதி போலீசார், தொழுகைக்கு கூட்டத்தை கூட்டிய அபுதாகிர், முகமது ரபிக் ஆகிய இரண்டு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.