கூட்டத்தைக் கூட்டி விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கர்நாடகத்தில் நடந்த கூத்து

 

கூட்டத்தைக் கூட்டி விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கர்நாடகத்தில் நடந்த கூத்து

நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய பிறந்த நாளுக்குக் கூட்டத்தைக் கூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்

நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய பிறந்த நாளுக்குக் கூட்டத்தைக் கூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் துருவெக்கெரே சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. இவர் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள தன்னுடைய கிராமத்தில் நேற்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்து, கேக் வெட்டி, பிரியாணி வழங்கி சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

bjp-mla-birthday

இதில் சிறப்பு என்ன என்றால், ஊரடங்கு உள்ள நிலையில் இவ்வளவு மக்கள் எப்படிக் கூடினார்கள் என்று தெரியவில்லை. யாரும் முகத்தில் மாஸ்க் அணியவில்லை… தமிழக டி.வி ஊடகங்கள் மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. தும்கூரில் கொரோனாவுக்கு உயிர்பலி நிகழ்ந்துள்ளது. அப்படி இருக்கும்போது இவ்வளவு ஆடம்பர பிறந்தநாள் இப்போது தேவையா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதேபோல் மகாராஷ்டிராவில் நவி மும்பையில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய பா.ஜ.க மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளார். அவர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.