‘கூகுள் பே-வில் பணத்தை கொடு, சந்துல வந்து சரக்க எடு” இவரு புது ரூட்டுல மது விற்றது எப்படி தெரியுமா?
கொரானா பரவாமலிருக்க அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தி அனைத்து கடைகளையும் அடைத்ததால், குடிகாரர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் பதுக்கிய மதுவை அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் மாட்டிக்கொள்கின்றனர்.
பெங்களூருவில் கிரண் என்ற நபர் ஆன்லைனில் முறைகேடாக மது விற்பனை செய்த போது போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
கொரானா பரவாமலிருக்க அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தி அனைத்து கடைகளையும் அடைத்ததால், குடிகாரர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் பதுக்கிய மதுவை அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் மாட்டிக்கொள்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரண் என்ற நபர் புதுவிதமான முறையில் போலீசுக்கு தெரியாமல் பல நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு மது விற்று வந்துள்ளார்.இவர் முதலில் ஆன்லைனிலும் ,பல வாட்ஸ் அப் குரூப்பிலும் தன்னுடைய போன் நம்பரை போடுவார் .பிறகு இவரின் நம்பருக்கு மது கேட்டு போன் செய்பவர்களிடம் முதலில் கூகுள் பே வில் பணம் கட்ட சொல்லுவார் .பிறகு அவர்களுக்கு மது கொடுக்க அவர்கள் இருக்கும் தெருவில் ஒரு சந்துக்குள் நிற்பார் .அங்கு வந்து அவர்களை மதுவை வாங்கிக்கொள்ள சொல்லுவார்.
இப்படி பல நாட்களாக மது விற்ற அவரை போலீசார் மாறு வேடத்தில் அவர்கள் ஒரு வாடிக்கையாளர் போல தொடர்பு கொண்டு அவரை பொறி வைத்து பிடித்தார்கள் .அவரிடமிருந்து பெட்டி பெட்டியாக மதுவை கைப்பற்றி அவரை கைது செய்தனர்