‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி’ : அ.தி.மு.க அமைச்சர் கொச்சை விமர்சனம்!

 

‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி’ : அ.தி.மு.க அமைச்சர் கொச்சை விமர்சனம்!

குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி மற்றும் வேட்பாளர் பிரச்சனை குறித்து பேசி முடித்து விட்டதாக  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகர் : குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி மற்றும் வேட்பாளர் பிரச்சனை குறித்து பேசி முடித்து விட்டதாக  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார். 

அதிமுக அமைச்சர்கள் சர்ச்சை கருத்துக்கள்!

ops

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகுதான் அதிமுக அமைச்சர்கள் பேசவே தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த, அமைச்சர்கள் அவர் மறைவுக்கு பிறகு பல்வேறு சர்ச்சை கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக மாறிவருவதாக சமூகவலைதளங்களில்  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த  தம்பதி

balaji

அதற்கு உதாரணமானது தான் இந்த சம்பவம். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியை அறிமுகப்படுத்தும் விழா ஒன்று  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி, ‘அதிமுக தலைமையிலான கூட்டணி நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அருமையான தம்பதியைப் போன்றது. ஆனால் திமுக கூட்டணி விவகாரத்து பெற்ற கூட்டணி’ என்றார்.

‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி’

kushboo

தொடர்ந்து பேசிய அவர், ‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி மற்றும் வேட்பாளர் பிரச்சனை குறித்து பேசி முடித்து விட்டதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழும் இரும்பு மனிதர்’ என்று புகழ்ந்து தள்ளினார்.

இப்படி தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களைப் பேசி வரும் ராஜேந்திர பாலாஜி, சபாநாயகர் கையை வெட்டுவேன் என்று கூறிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி கையை வெட்ட எவ்வளவு நேரம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்க:கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமார்; சோகத்தில் மோடி, குஷியில் எடப்பாடி பழனிசாமி?!