குவைத் நாட்டில் 24 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

 

குவைத் நாட்டில் 24  இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

குவைத் நாட்டில் 24 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத் சிட்டி: குவைத் நாட்டில் 24  இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளதால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், குவைத் நாட்டில் உள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

kuwait

மேலும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 28 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் அந்நாட்டில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இரண்டு பேர் வங்காள தேசம் மற்றும் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளது.