குழாயடி சண்டைக்கெல்லாம் நாங்கள் ரெடியாக இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

குழாயடி சண்டைக்கெல்லாம் நாங்கள் ரெடியாக இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எதிர்க்கட்சிகள் அழைக்கு குழாயடி சண்டைக்கு அதிமுக தயாராக இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: எதிர்க்கட்சிகள் அழைக்கு குழாயடி சண்டைக்கு அதிமுக தயாராக இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டு கதவை தட்டியே ஆக வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து விவாதப்பொருளானது. மேலும், மத்திய பாஜக துணையோடு ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியின் வீட்டு கதவை மத்தியில் ஆள நினைப்பவர்கள் வந்து தட்டுவார்கல் என ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது அறிவிலித்தனத்தை காண்பிக்கிறது என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர்.

இதற்கிடையே இதுகுறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,காங்கிரஸ் கூட்டணியை மனதில் வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியிருக்கலாம் என்றார்.

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியை மனதில் வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கலாம் என்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தை ஏற்க முடியாது. எதிர்க்கட்சியினர் அழைக்கும் குழாயடி சண்டைக்கு நாங்கள் தயாராக இல்லை என்றார்.