குழப்பான டீவீட் போட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட நடிகர் பார்த்திபன்
இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும் சற்று வித்தியாசப்பட்டிருக்கும்.
இவரது சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர்.
2020 ?
இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா?
என்ன சினிமா செய்யலாம்?
ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு?
குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா? pic.twitter.com/WjIe7r0pEs— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 26, 2019
இந்நிலையில் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘2020 ?இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா? என்ன சினிமா செய்யலாம்? ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு? குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா?’ என்று ஒரு குழப்பமான ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
யோவ், வயசான பிறகாவது மன முதிர்ச்சிக்கு வா. இன்னமும் டுபாக்கூர் உரையாடல் ஆசிரியத்தனமா எதுகை மோனை!
இயல்பா எழுது.
— பழங்குடியான் (@karikaalan1CE) December 26, 2019
இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவிட நெட்டிசன் ஒருவரோ, யோவ், வயசான பிறகாவது மன முதிர்ச்சிக்கு வா. இன்னமும் டுபாக்கூர் உரையாடல் ஆசிரியத்தனமா எதுகை மோனை!
இயல்பா எழுது என்று பார்த்திபனை சாடியுள்ளார்.