குழந்தை, வாலிப வயதினருக்கு திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

 

குழந்தை, வாலிப வயதினருக்கு திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சமஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.

திருஷ்டி என்பது சமஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். திருஷ்டி கழித்தல் என்பது நம் முன்னோர்கள் முதல் காலம் தொட்டு செய்து வரும் விஷயமாகும். ஆனால், குழந்தைகளுக்கு எப்படி திருஷ்டி சுத்தி போடுவது? அதேபோல், வாலிப வயதுடையோருக்கு எப்படி திருஷ்டி சுத்தி போடுவது?

வாலிப வயதினருக்கு:

salt

ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே  அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையர மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும். இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.

குழந்தைகளுக்கு:

 

baby

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.

நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.