குழந்தை சுர்ஜித்தை மீட்க 61 மணிநேரமாக தொடரும் போராட்டம்!

 

குழந்தை சுர்ஜித்தை மீட்க 61 மணிநேரமாக தொடரும் போராட்டம்!

மாநில, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் பல தனி நபர்கள்  என பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

திருச்சி : குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 61 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட  ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் பல தனி நபர்கள்  என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

sujith

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் பாறைகள் இருப்பதால் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
 

surjith

 88 அடி  ஆழத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் அந்த சிசுவை மீட்க,  கடந்த 61 மணிநேரமாகப் பலரும் போராடி வருகின்றனர்.  சுர்ஜித் மீண்டு வர வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.