‘குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுங்க மாஸ்டர்’: சாண்டியின் முன்னாள் மனைவி உருக்கம்!
குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன், உதவி செய்யுங்கள் என்று சாண்டியின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி, நடிகர் லாரன்ஸிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். அதில், நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து சுஜித் நெடிது பெயரிட்டு வளருங்கள். அதற்கான படிப்பு செலவை நான் ஏற்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
@offl_Lawrence master. I lost ur no. I would like to adopt a kid. Life ain’t complete without a kid. Adoption is not easy of late ? can you please help me get a kid for adoption. I will take care of the baby expenses . Would be grateful if you can help me. Thankyou master? pic.twitter.com/VqTiwyLJFt
— Kaajal Pasupathi (@kaajalActress) November 4, 2019
இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி ராகவா லாரன்ஸிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், உங்கள் தொடர்பு எண் தவறிவிட்டது லாரன்ஸ் மாஸ்டர். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். குழந்தையில்லாமல் வாழ்க்கை முழுமை அடையாது. குழந்தை தத்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இருப்பினும் தத்தெடுக்கும் வழிமுறைக்கு உதவினால் காலம் முழுக்க நன்றியுடன் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை காஜல் பசுபதி பலருக்கும் பரிட்சயமானவர். டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவியான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். சாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற இவர் தனது அம்மாவுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.