குழந்தையை அடகு வைக்க சென்ற தந்தை: அதிர்ந்து போன கடைக்காரர்; கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?!
குழந்தையுடன் அடகுக்கடைக்கு வந்த தந்தை ஒருவர், இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள் என்று கேட்டு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.
புளோரிடா: குழந்தையுடன் அடகுக்கடைக்கு வந்த தந்தை ஒருவர், இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள் என்று கேட்டு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் ஸ்லோகும். இவர் அருகில் உள்ள அடகுக் கடைக்கு தன் கைக்குழந்தையோடு சென்றுள்ளார். அங்கிருந்த அடகு கடை உரிமையாளர் ரிச்சர்ட்டிடம் இவன் என் குழந்தை. இவனால் எனக்கு எந்த பயனும் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்? என்று கேட்டுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அடகுக் கடை உரிமையாளர் இது குறித்து போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்லோகுமிடம் விசாரணை நடத்த, ‘நான் நகைச்சுவையாகக் கூறினேன். அதை அவர் புரிந்து கொள்ளாமல் இப்படிச் செய்து விட்டார்’ என்று கூறியுள்ளார். ஆனால் அடகுக் கடைக்காரர் ரிச்சர்ட்டோ, கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இதனை என்னால் அடகு வைக்க முடியுமா? என்று சிரித்துக்கொண்டு கேட்கிறார். இதில் எந்த நகைச்சுவையும் இல்லை. இது மரியாதைக்குரிய வியாபாரம் ‘ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை விசாரித்த போலீசார் குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும் குழந்தையுடன் தந்தையை எச்சரித்து அனுப்பினர். இது குறித்து வழக்கு எதுவும் பதியப்படவில்லை.