குழந்தையும் இல்ல: ஆன்லைன் ரம்மியால் மொத்த பணமும் போச்சு; காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு!?

 

குழந்தையும்  இல்ல: ஆன்லைன் ரம்மியால் மொத்த பணமும் போச்சு; காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு!?

காதல் திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை: காதல் திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை நாகமலை அருகே என்.ஜி.ஜி.ஓ. காலணியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியன். இவரது மனைவி  பட்டு மீனாட்சி. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்க்க இருவரும் அழுகிய நிலையில் தூக்கில்  பிணமாகத் தொங்கியுள்ளனர். 

couple

இதையடுத்து இவர்களது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதும், வீட்டில் அவர்கள் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த வேங்கட சுப்ரமணியன், காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றையும்  கணவனும், மனைவியும் நடத்தி வந்துள்ளனர். நல்ல வசதியோடு ஆடம்பரமாக வாழ்ந்து வந்த  இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தம்பதியினரின் குடும்பத்தினர் இவர்களுக்கு  முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்துள்ளனர்.  இதனால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

couple

மேலும்  வேங்கட சுப்ரமணியன் ஆன்லைனில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது.  இதனால் வீட்டிலிருந்த கார் மற்றும் நகைகளை அடகு வைத்துள்ளார். பணம் இல்லாமல் நொடிந்து போனதால் கூட இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் போலீசார் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.