குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட ஸ்டீல் பாத்திரம்…கதறி துடித்த குழந்தை!
Dec 12, 2019, 13:38 IST1576138135000
இதையடுத்து இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவ அங்கு சிறிது நேரத்தில் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் எனுமிடத்தில் ஸ்டீல் பாத்திரத்துடன் 3 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையில் பாத்திரமானது சிக்கி கொண்டது.
இதனால் குழந்தை அலறிய அழ பதறிப்போன பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயன்றும் வரவில்லை. இதையடுத்து இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவ அங்கு சிறிது நேரத்தில் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
பின்னர் குழந்தையை மீட்க அவர்கள் சில மணிநேரம் போராடிய நிலையில் இறுதியாகப் பாத்திரத்தை வெட்டி குழந்தையை அப்பகுதியினர் மீட்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.