‘குழந்தைபேறுக்கு மருந்து தருகிறேன்’ மனைவியை நம்பி அனுப்பிய கணவர்; சித்த மருத்துவர் செய்த கேடுகெட்ட காரியம்!

 

‘குழந்தைபேறுக்கு மருந்து தருகிறேன்’ மனைவியை நம்பி அனுப்பிய கணவர்; சித்த மருத்துவர் செய்த கேடுகெட்ட காரியம்!

மருந்து ஒன்று இல்லை. அதனால் போன் செய்யும் போது  வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

சென்னை பட்டாபிராம், மேற்கு கோபாலபுரத்தில் வசிக்கும் ராஜா. இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இவரது மனைவிக்கும் குழந்தைப் பேறு  இல்லாமல் இருந்துள்ளது. 

ttn

இதையடுத்து கடந்த 6 மாதத்துக்கு முன்பாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ராஜா, கீழ்ப்பாக்கம் காலணியைச் சேர்ந்த சித்த மருத்துவர் அண்ணாதுரை என்பவரிடம் பச்சிலை வைத்தியம் எடுத்துள்ளார். அதன்பிறகு அவருக்கு நோய் குணமாகியுள்ளது.  சிகிச்சையின் போதே ராஜாவுக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்துகொண்ட சித்த மருத்துவர் அண்ணாதுரை அவரிடம் நான் மருந்து ஒன்று கொடுக்கிறேன். நீங்கள் உட்கொள்ளுங்கள்.  6 மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும். என்னிடம் ஒரு முக்கியமான மருந்து ஒன்று இல்லை. அதனால் போன் செய்யும் போது  வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

ttn

அதேபோல் ,மருந்து வந்துவிட்டது என்று கூறி ராஜாவை அழைக்க அப்போது வேறு வேலையாக இருந்த ராஜா  தன் மனைவியை அனுப்புவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ராஜாவின் மனைவி அண்ணாதுரையின் வீட்டுக்கு மருந்து வாங்கச் சென்றபோது, அவரை வரவேற்ற அண்ணாதுரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுளார். பின்னர் எதிர்பாராத விதமாக அண்ணாதுரை ராஜாவின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

ttn

இதனால் அதிர்ச்சியடைந்த  ராஜாவின் மனைவி, சித்த மருத்துவர் அண்ணாதுரையை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் இதுகுறித்து  100க்கு போன் செய்து புகார் கொடுத்தார். அதற்குள் அண்ணாதுரை தப்பி ஓடிவிட்டார். தற்போது சித்த மருத்துவர் போர்வையில் வலம்வந்த அண்ணாதுரையை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.