குழந்தைகள் பாலியல் வன்முறை காட்சியை பதிவேற்றம் செய்தவர்கள் பட்டியல்… மீண்டும் மிரட்டும் ஏ.டி.ஜி.பி ரவி

 

குழந்தைகள் பாலியல் வன்முறை காட்சியை பதிவேற்றம் செய்தவர்கள் பட்டியல்… மீண்டும் மிரட்டும் ஏ.டி.ஜி.பி ரவி

குழந்தைகள் பாலியல் காட்சிகளை பதிவேற்றம் செய்தவர்கள் பட்டியல் தயாராகி வருகிறது என்று ஏ.டி.ஜி.பி ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாலியல் காட்சிகளை பதிவேற்றம் செய்தவர்கள் பட்டியல் தயாராகி வருகிறது என்று ஏ.டி.ஜி.பி ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.

ttn

குழந்தைகள் பாலியல் வன்முறை காட்சிகளை பதிவேற்றம் செய்த, ஷேர் செய்த நபர்களை கைது செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவருடைய சமூக ஊடக பக்கங்களில் நட்பு வட்டாரத்திலிருந்தவர்களில் டாக்டர்கள், தொழிலதிபர்கள் உள்பட சிலர் குழந்தைகள் ஆபாச வன்முறை காட்சிகளை பதிவேற்றம், ஷேர் செய்தது தெரியவந்தது என்று கூறப்பட்டது. இதனால், இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ttn

அப்படி பதிவேற்றம் செய்த நல்லவர்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாம் என்று காத்திருந்தால், மீண்டும் ஒரு மிரட்டலான அறிவிப்புதான் வந்துள்ளது.குழந்தைகள் பாலியல் வதை காட்சிகளை அப்லோட், ஷேர் செய்த சென்னையைச் சேர்ந்த 30 பேர் பட்டியல் தற்போது தயாராகி வருவதாகவும், அவர்கள் ஐ.பி அட்ரஸை வைத்து வீட்டு முகவரியை கண்டுபிடித்து வருவதாகவும் வரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் ஏ.டி.ஜி.பி ரவி கூறியுள்ளார்.எப்போதான் சார் பட்டியல் தயாரிப்பு முடிந்து நடவடிக்கையில் இறங்குவீர்கள் என்று கேட்கும் அளவுக்கு போலீசாரின் நடவடிக்கை உள்ளது என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.