குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஆப் அறிமுகம் செய்த லதா ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தொடர்பான ஆப் ஒன்றை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிட்டார்.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தொடர்பான ஆப் ஒன்றை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிட்டார்.
லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் தயா பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற, கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவும் வகையில் ‘பீஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், ‘ஒரு அரசு செய்ய வேண்டிய பணியை என் மனைவி செய்கிறார்’ என்று பெருமிதத்துடன் கூறினார்.
தற்போது இந்த அமைப்பின் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பிற்கான பிரத்யேக ஆப் ஒன்றை ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி லதா ரஜினிகாந்த் வெளியிட்டார்.
I wish peace and safety for all Children across the world.. A toll free number 18001208866, App Link https://t.co/kZZZeGSOhu and the website: https://t.co/A7DV0sTFh0 has been activated from today.#PeaceForChildren – An initiative of Smt.Latha Rajinikanth pic.twitter.com/31McUFhl9e
— Rajinikanth (@rajinikanth) December 12, 2018
இது தொடர்பான செய்திக் குறிப்பில், ‘ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தயா அறக்கட்டளையும், அதன் உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (டோல் ஃப்ரீ) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு ஆப்-பை வெளியிடுகிறோம். இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’.