குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாற்றுத்திறனாளி மழலைகளோடு கமல்!

 

குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாற்றுத்திறனாளி மழலைகளோடு கமல்!

தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியுள்ளார் கமல்ஹாசன்.

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியுள்ளார் கமல்ஹாசன்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத் திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

kamal

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முன் உருக்கமாகப் பேசினார்.

kamal

அப்போது, “36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபார்வை படப்பிடிப்பு சமயத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் இங்கு வந்ததாக நினைவு கூர்ந்தார். அப்போது மழலையர்கள், ஒரு பாடலைப் பாடி தனக்கு திடீர் ஆச்சர்யம் கொடுத்ததாகவும், அதைக் கண்டு தாங்கள் அழுது விட்டதாகவும் கூறி கண் கலங்கியுள்ளார் கமல்ஹாசன்.