குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? புழுக்களின் தொல்லையாக இருக்கலாம்

 

குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? புழுக்களின் தொல்லையாக இருக்கலாம்

இதோ சூப்பர் டிப்ஸ்…
நாம் என்ன தான் ருசியாக சமைத்தாலும், சில குழந்தைகள் அரை இட்லியை சாப்பிடுவதற்கே அரைமணி நேரமாய் நெளிந்து, அடம்பிடித்து வம்பு செய்வார்கள். தனிக்குடித்தனம் பெருகி விட்ட இந்தக் காலத்தில், என்ன செய்வது என்று புரியாமல் மருத்துவரை நோக்கி பதட்டமாய் ஓடுவோம். 

இதோ சூப்பர் டிப்ஸ்…
நாம் என்ன தான் ருசியாக சமைத்தாலும், சில குழந்தைகள் அரை இட்லியை சாப்பிடுவதற்கே அரைமணி நேரமாய் நெளிந்து, அடம்பிடித்து வம்பு செய்வார்கள். தனிக்குடித்தனம் பெருகி விட்ட இந்தக் காலத்தில், என்ன செய்வது என்று புரியாமல் மருத்துவரை நோக்கி பதட்டமாய் ஓடுவோம். 

boy

நான்கைந்து கலர்களில் டானிக் பாட்டில்களை எழுதிக் கொடுப்பார். நாம் எல்லாம் இப்படி டானிக்குள் குடித்தா வளர்ந்து வந்தோம் என்று எந்த பெற்றோருமே யோசிப்பதில்லை. 
குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. இது அதிகம் உடலில் இருந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்துவிடும். அதனால் சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும்
அதில் வயிற்று வலி, வாய்வு தொல்லை, வயிற்றுப்போக்கு, கெட்ட துர்நாற்றம், நிம்மதியற்ற தூக்கம், தலைவலி, உடல் சோர்வு, இரத்த சோகை, காய்ச்சல், கால் வலி போன்ற பல நோய்களுக்கான ஆரம்பம் புழுக்களினால் இருக்கலாம். சில எளிய முறைகளைப் பின்பற்றினாலே குடலில் இருக்கும் புழுக்களைத் துரத்தியடிக்கலாம்.

coconut

வாரம் இரண்டு முறை காலையில் சாப்பிடும் போது 1 சிறிய துண்டு தேங்காய் சாப்பிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர வேண்டும்.
பூண்டை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் எவ்வித புழுக்கள் இருந்தாலும் அழிந்துவிடும். அதிலும் அதனை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்துவிடும். வாரத்தில் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வர வேண்டும்.
பப்பாளி விதையை நன்கு உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 2 டீஸ்பூன் பப்பாளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து, பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர வேண்டும். 
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சாப்பிட்டு 15-20 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் நீரில் 1 1/2 டீஸ்பூன் ஓமத்தை தட்டி சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், உடலை ஆரோக்கியமாக புழுக்களின்றி வைத்துக் கொள்ளலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த வேப்பம்பூவை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து, வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இப்படி நான்கு நாட்கள் தினமும் இரண்டு முறை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
கேரட்டை துருவி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தைகளுக்குக் கொடுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடலாம்.
ஒரு கப் சூடான தண்ணீரில் 1 டீஸ்பூன் கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

turmeric

ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் மோரில் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் அகலும்.
தினமும் 4-6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடும். முக்கியமான விஷயம் நீங்கள் குழந்தைகளுக்குத் தருகிற தேங்காய் எண்ணெய் சுத்தமானதாக இருக்கட்டும்.