குழந்தைகள் ஆபாச வீடியோ புகார்… சோதனையின்போது அலமாரியில் கிடைத்த அதிர்ச்சி!

 

குழந்தைகள் ஆபாச வீடியோ புகார்… சோதனையின்போது அலமாரியில் கிடைத்த அதிர்ச்சி!

ஜெர்மனியில் குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவுகளை வெளியிட்டுவந்த நபர் ஒருவரின் வீட்டை சோதனையிட்ட போது அலமாரியிலிருந்து 15 வயது சிறுவனை போலீசார் மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் குழந்தைகள் ஆபாச படங்களை ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தது தொடர்பாக போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதன் அடிப்படையில் லார்ஸ் என்பவரை விசாரணை செய்வதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். வீட்டைச் சுற்றிப் பயன்படுத்தப்பட்ட நேப்கின்கள் கிடந்துள்ளது. மேலும் வீட்டில் சிறுநீர் துர்நாற்றம் வீசியது. இதனால், போலீசார் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

வீட்டின் அலமாரியில் சில ஆபாச படங்கள் சி.டி உள்ளிட்டவை சிக்கியது. அலமாரியை சோதனை செய்தபோது அதற்குள் 15 வயது சிறுவன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவனை மீட்டு அவனிடம் விசாரணை செய்தபோது, அவனது பெயர் மெர்வின் என்பதும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கடத்திவந்து இந்த அலமாரியில் அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாகவும் கதறியுள்ளான். 

Child Abuse

உடனடியாக அவனை மீட்ட போலீசார், சிறுவனைப் பற்றித் தேடினர். அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மெர்வினின் பெற்றோர் அவன் காணவில்லை என்று புகார் அளித்ததும், கண்டுபிடிக்க முடியாததால் அந்த வழக்கை கைவிட்டதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து லார்ஸைஸயும் அவனது தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தினத்தில் அவன் என்ன ஆடை அணிந்திருந்தானோ, அதே ஆடையிலிருந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுவன் மெர்வின் கூறுகையில், “இரண்டரை ஆண்டுகள் அலமாரியிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். சுத்தமான காற்று கூட கிடைக்காது” என்று கண்ணீரோடு கூறியது நெஞ்சை உருக்கும் வகையிலிருந்தது.