குழந்தைகளை குறை சொல்லாமல் ஊக்கப்படுத்துங்கள்: நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை!

 

குழந்தைகளை குறை சொல்லாமல் ஊக்கப்படுத்துங்கள்: நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை!

குழந்தைகளை வளர்ப்பதிலும் கண்காணிப்பதிலும் பெற்றோர் எப்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

காரைக்குடி: பெற்றோர்கள் குழந்தைகளிடம் உள்ள குறையை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்யுங்கள் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வளர்ப்பதிலும் கண்காணிப்பதிலும் பெற்றோர் எப்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் தேவை என்ன என்பது நமக்கு தெரியவரும். குழந்தைகள் விருப்பும் விஷயத்தில் அவர்களைக் கவனம் செலுத்தச்சொல்லி அதில் அவர்களின் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டும். இதுபோன்று குழந்தைகள் வளர்ப்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை அனுபவரீதியாகவும்  அறிவியல் ரீதியாகவும் கூறி வருகின்றனர். 

sethupathi

 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அரசுப் பள்ளியில் படித்த  ஷெரின் அனிதா என்ற மாணவி தாய்வான் நாட்டில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் உள்ள குறையை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்யுங்கள்’ என்றார்.