குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாக நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு!

 

குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாக நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு!

குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி  அத்துமீறி கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்திருந்தார்.  

குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ கட்டியதாக குஜராத் போலீசார் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மத்திய அரசால் தேடப்பட்டு வரும்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் நித்தியானந்தா. இந்நிலையில்  நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்திருந்தார். அதில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாக விவேகானந்த நகர் மற்றும்  குழந்தைகள் நல அமைப்பினரிடம்  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்கள் ஆசிரமத்திற்கு வந்து குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி  அத்துமீறி கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்திருந்தார்.  

ttn

மனுவை விசாரித்த  சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விவேகானந்த நகர் போலீசார், நித்தியானந்தா மீதும், காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் உள்ளிட்ட 14 பேர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.