குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் போக்சோவில் கைது!

 

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் போக்சோவில் கைது!

ப்போது, அந்த மாணவன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ராஜா(26) மற்றும் மஞ்சுநாத்(22) என்னும்  இரண்டு இளைஞர்கள் அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வரும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் சிறுவனும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல நேற்று முன்தினமும் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த மாணவன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ராஜா(26) மற்றும் மஞ்சுநாத்(22) என்னும்  இரண்டு இளைஞர்கள் அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். 

ttn

அந்த மாணவனும் அவர்கள் தனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ராஜாவும், மஞ்சுநாத் அவர்களிடம் இருந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளனர். அதில், மது கலக்கப் பட்டிருந்துள்ளது. அதனை அறியாமல் அந்த மாணவி குளிர்பானத்தைக் குடித்துள்ளார். உடனே மது போதையால் மயங்கி விழுந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்ததை எல்லாம் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த மாணவன் மீதும் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

ttn

அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கும் ராஜா மற்றும் மஞ்சுநாத்தை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.