குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய அதிமுக நிர்வாகி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

 

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய அதிமுக நிர்வாகி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அதிமுக நிர்வாகி அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அதிமுக நிர்வாகி அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கு ஸ்வேதாஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். பள்ளியில் படித்து வரும் ஸ்வேதாஸ்ரீக்கு மதுரை மாவட்ட அதிமுக 33வது வட்ட பிரதிநிதி இளங்கோ, பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று திடீரென மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிஷா நேற்று தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், ஆயிஷாவை காப்பாற்றி வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

madurai

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஆயிஷா, “என் மகள் ஸ்வேதாஸ்ரீயை பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தியதால்,  அதை தட்டிக்கேட்டேன். இதனால் அதிமுக 33வது வட்ட பிரதிநிதி இளங்கோ,  மனைவி முத்துமாரி, வெங்கடேசன் ஆகியோர் கடந்த 14ம் தேதி நான் குளித்து கொண்டிருக்கும்போது என்னை நிர்வாணமாக வெளியே இழுத்து சென்றனர். பொதுமக்கள்  முன்னிலையில் என் மானம் போனதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் மறுபடியும் என்னை அடித்ததால் ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்துடன் தீக்குளிப்பதை  தவிர வேறு வழி இல்லை” என குமுறியுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை அதிமுக நிர்வாகி மானபங்கம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசாரும் மவுனம் சாதித்து வருகின்றனர்.