குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்த விவகாரம் : தர்ம அடி வாங்கிய இளைஞர்கள் !

 

குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்த விவகாரம் : தர்ம அடி வாங்கிய இளைஞர்கள் !

இவர்கள் கடந்த 12 ஆம் தேதி ராக்கிபாளையம் என்னும் பகுதியில் எலக்ட்ரிக் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாரத், சக்திவேல் ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியே தங்கியிருந்து எலக்ட்ரிக் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12 ஆம் தேதி ராக்கிபாளையம் என்னும் பகுதியில் எலக்ட்ரிக் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர்.

Vedio

வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததாகக் கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த கனகராஜ், ரவிக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் இவர்களை அடித்துள்ளனர். 

Bharat and sakthivel

இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியதால் பாரத் மற்றும் சக்திவேலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் திருமுருகன் பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தங்களை அடித்து விட்டதாக பாரத், சக்திவேல் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், கனகராஜ் மற்றும் ரவிக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த பெண்ணும் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

police station

அந்த புகாரில், பாரத் மற்றும் சக்திவேல் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது செல்போன் மூலம் ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதில் யார் தவறு செய்தார்கள் என்று குழம்பிப் போன காவல்துறையினர், பாரத் மற்றும் கனகராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.