குளத்திற்குள் இன்று வைக்கப்படுகிறார் அத்தி வரதர்: அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்தி வரதர் இருக்கும் இடம் இதுதான்!
வரலாறு காணாத கூட்டத்தைக் கண்ட அத்தி வரதர் தரிசனம் நேற்றுடன் முடிந்த நிலையில் அத்தி வரதர் இன்று குளத்தில் வைக்கப்படவுள்ளார்.
காஞ்சிபுரம்: வரலாறு காணாத கூட்டத்தைக் கண்ட அத்தி வரதர் தரிசனம் நேற்றுடன் முடிந்த நிலையில் அத்தி வரதர் இன்று குளத்தில் வைக்கப்படவுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம்.
அதன்படி அத்தி வரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஜூலை 31 ஆம் தேதிவரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர், அதன்பிறகு நின்ற கோலத்தில் அருள்பாலித்து வந்தார். இதுவரை கோடிக்கணக்கான மக்கள் அத்தி வரதரைத் தரிசித்து உள்ளனர். நேற்று இரவுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைந்தது.
இந்நிலையில் இனிவரும் 40 ஆண்டுகள் அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுவார். அதனால் இன்று அதிகாலையே அத்தி வரதருக்குப் பரிகார பூஜை தொடங்கியது.
#AthiVaradar #
அடுத்த 40 ஆண்டுகள் ஸ்ரீ அத்திவரதர் அமரப்போகும் இடம். ??????? pic.twitter.com/5giG4Vjy7E— Jayaprakash.g (@Jayapra86533483) August 17, 2019
அடுத்த 40 ஆண்டுகளுக்குச் சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மூலிகை திரவியங்கள் பூசப்படுகிறது. சரியாக இன்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் அத்தி வரதர் சிலை குளத்தில் வைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் என்று தெரிகிறது.