குற்றவாளியை 3 மணிநேரத்தில் காட்டிக் கொடுத்த மோப்ப நாய் ! பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த குற்றவாளி கைது !

 

குற்றவாளியை 3 மணிநேரத்தில் காட்டிக் கொடுத்த மோப்ப நாய் ! பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த குற்றவாளி கைது !

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் கடந்த 20ஆம் தேதி 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இதையடுத்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிந்து மோப்ப நாய் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் துப்புத் துலக்கித் தந்த போலீஸ் மோப்ப நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் கடந்த 20ஆம் தேதி 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இதையடுத்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிந்து மோப்ப நாய் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர். அர்ஜூன் என்ற பெயர் கொண்ட அந்த மோப்ப நாய் கார்த்திக் வீட்டில் உடமைகளை நன்றாக மோப்பம் பிடித்து பின்னர் சிசிடிவி இருக்கும் இடத்தில் நின்றது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கார்த்திக்கின் வீட்டின் அருகே இருக்கக்கூடிய கோகிலா என்பவருடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சதீஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து, நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
புகார் தந்த 3 மணிநேரத்தில் மோப்ப நாய் அர்ஜூன் குற்றவாளியை பிடிக்க உதவியதற்கு கார்த்திக்கின் மனைவி நன்றி தெரிவித்தார். மேலும் கொள்ளையடிக்கும் பணத்தை உபயோகமாக பயன்படுத்தாமல் பல பெண்களுடன் சதீஷ்குமார் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
குற்றவாளியை உடனடியாக கைது செய்து நகைகளை மீட்டுக் கொடுத்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோரை மாநகரக் காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.