குற்றவாளியிடம் சந்திப்பு… லலிதா ஜுவல்லரி ஓனர் செய்த வேலை?! நெகிழ்ந்த காவலர்கள்!

 

குற்றவாளியிடம் சந்திப்பு… லலிதா ஜுவல்லரி ஓனர் செய்த வேலை?! நெகிழ்ந்த காவலர்கள்!

நாம் எல்லோரும் லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் லலிதா ஜுவல்லரியின் பெரிய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது நம்பிக்கை, நாணயம் பற்றி பேசும் அந்த முதலாளியின் உண்மையான உழைப்பு. இந்த செய்தி உண்மையா, வதந்தியா என்று தெரியாது.

நாம் எல்லோரும் லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் லலிதா ஜுவல்லரியின் பெரிய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது நம்பிக்கை, நாணயம் பற்றி பேசும் அந்த முதலாளியின் உண்மையான உழைப்பு. இந்த செய்தி உண்மையா, வதந்தியா என்று தெரியாது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக முகநூல் பக்கங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் லலிதா ஜுவல்லரியின் ஓனர் மீது பன்மடங்கு மதிப்பும், மரியாதையும் கூடுகிறது.
ஒரு நல்ல நிறுவனமும், அதை நிர்வகிக்கும் முதலாளியும், தனது நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையையும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கும் இந்த செய்தி சிறந்த எடுத்துக்காட்டு!

lalitha

திருச்சி லலிதா ஜுவல்லரியின் கொள்ளையடித்தவர்கள் போலீசாரிடம் பிடிபட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னார் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார் லலிதா ஜுவல்லரியின் ஓனர். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது. 
குற்றவாளியிடம் ஒரேயொரு கேள்வி தான் கேட்டார். எனது கிளைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம், அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும்.
குற்றவாளி சொன்ன பதில். நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இங்கு நகை வாங்க வந்துள்ளோம். நகையை அவள் பார்த்து கொண்டு இருக்கும் போது, நான் கடையை கவனித்து எப்படி வர முடியும் என்று பார்த்து பின் பிளான் போட்டு உள்ளே வந்தோம் என்றான்.
சரி குழப்பம் தீர்ந்தது நன்றி என்றார். 
ஏன் சார் எனக்கு நன்றி சொல்றீங்க என்று குழப்பமாக கேட்டான் குற்றவாளி.
அவர் சொன்ன பதில் உண்மையிலே நெகிழ வைத்தது. இல்லை எனக்கு திருடு போன நகையை பற்றி கவலை இல்லை. இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதை விட அதிகமாக சம்பாதிக்க என்னிடம் தைரியம் உள்ளது. எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது? நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழப்பியது. அதை விட எனது கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது? அதை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியனின் பணத்தேவை எனக்கு ஏன் தெரியவில்லை ,

murugan

அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன். அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றார்.
எப்படி இவர்கள் மட்டும் இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு முக்கிய காரணம். தன்னுடைய தொழிலாளி மன நிறைவு தான் முக்கியம் அவனுக்கு அதை நான் சரியாக செய்தால் தான் நான் முதலாளி என்ற தகுதியை பெறுவேன் என்ற உயர்ந்த சிந்தனைகள் தான் இவர்களை போன்றவர்களை முதலாளிகளாக உயர்த்தி அழகு பார்க்கிறது இவர்களின் வாழ்க்கை