குறைந்த விலைக்கு கொலைகள் -வாடகை கொலைகாரர்களின் வெறிச்செயல் -கட்டியவளை கண்டந்துண்டமாக்க சொன்ன கணவன் .

 

குறைந்த விலைக்கு கொலைகள் -வாடகை கொலைகாரர்களின் வெறிச்செயல் -கட்டியவளை கண்டந்துண்டமாக்க சொன்ன கணவன் .

பெங்களூரு அருகே வியளிக்கவள் போலிசார் வெள்ளிக்கிழமையன்று தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவனையும் ,மேலும் கணவனால் அமர்த்தப்பட்ட இரண்டு கூலி கொலைகாரர்களையும் கைது செய்தனர் .

பெங்களூரு அருகே வியளிக்கவள் போலிசார் வெள்ளிக்கிழமையன்று தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவனையும் ,மேலும் கணவனால் அமர்த்தப்பட்ட இரண்டு கூலி கொலைகாரர்களையும் கைது செய்தனர் .

culprit

வியளிக்கவலில் வினுதா என்ற 34 வயது பெண்ணும் ,அவரது கணவர் நாகேந்திரனும் கணவன் மனைவி. ,இருவரும் கருத்து வேறுபாடால் தனித்தனியாக  வாழ்ந்து வருகின்றனர் .அவர்களின் 11 வயது மகன் கூட்டுறவு வங்கி ஊழியரான நாகேந்திரனிடம்  இருக்கிறார் .நாகேந்திரன் 2 மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் ,ஜெகநாத் என்ற இரண்டுபேரையும் அவர்களின் வீட்டில் தனது  மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டுவதற்காக குடி வைத்தார்

h

.சம்பவத்தன்று வினுதாவின் பெற்றோர் அவருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் சந்தேகப்பட்டு வீட்டை உடைத்து வந்து பார்த்தபோது வினுதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தனர் .

culprit

போலீசார் விசாரித்து பிரசாந்த் மற்றும் ஜெகநாத் என்ற ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்து விசாரித்தபோது அப்பெண்ணின் கணவர் நாகேந்திரன்தான் அப்பெண்ணை கொலை செய்ய தங்களை கூலிக்கு அமர்த்தினார் என்ற தகவல் கிடைத்து நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர் .அவர்கள் வினுதாவை விபத்தில் இறந்தது போல ஒரு செட்டப்பை வீட்டில் உருவாக்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் .