குறட்டை விட்டு தூங்கிய தாய்: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை; விழுப்புரத்தில் பரபரப்பு!

 

குறட்டை விட்டு தூங்கிய தாய்: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை; விழுப்புரத்தில் பரபரப்பு!

ஓடும் பேருந்திலிருந்து 9 மாத பெண் குழந்தை தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: ஓடும் பேருந்திலிருந்து 9 மாத பெண் குழந்தை தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை மடியில் வைத்தபடி தூங்கிய தாய் 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச்  சேர்ந்தவர் சரண்யா இவர் தன்னுடைய 9 மாத பெண் குழந்தையுடன் விழுப்புரத்திலிருந்து பெங்களூரில் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் குழந்தையை மடியில் வைத்தபடி சரண்யா தூங்கத் தொடங்கியுள்ளார். 

பேருந்தின் வெளியே விழுந்த குழந்தை

செங்கம் அடுத்த பாச்சல் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, குழந்தையானது சரண்யாவின் மாடியிலிருந்து தவறி பேருந்தின் வெளியே விழுந்துள்ளது. ஆனால்  குழந்தை விழுந்தது கூட தெரியாமல் சரண்யா தூங்கிக் கொண்டிருக்க, பின்னால் லாரி ஒன்று வந்துள்ளது. லாரியின் ஓட்டுநர், குழந்தை கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து, லாரி ஓட்டுநர் பேருந்தை முந்திச்சென்று பேருந்தை நிறுத்த சொல்லி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு  சாலையில் கிடந்த குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைக்குச் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.