குரூப் 2 தேர்வு முறைகேடு… அரசுப் பணியில் உள்ள 20 பேர் தலைமறைவு !

 

குரூப் 2 தேர்வு முறைகேடு… அரசுப் பணியில் உள்ள 20 பேர் தலைமறைவு !

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

ttn

அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்ததாகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் சித்தாண்டி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவலர் சித்தாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது  கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். குரூப் 2 முறைகேடு உறுதி செய்யப்பட்டால் அரசுப் பணியில் இருப்பவர்களின் வேலை பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசுப் பணியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.