குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

 

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 85 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது.

இதன் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,602 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.