குரு பெயர்ச்சி 2018 : 12 ராசிகளும் குரு பெயர்ச்சி பரிகாரங்களும்!

 

குரு பெயர்ச்சி 2018 : 12 ராசிகளும் குரு பெயர்ச்சி பரிகாரங்களும்!

வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிகளுக்கு உண்டான பரிகாரங்களை பற்றி இந்த பதிவில் பார்போம்

குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நாளை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.அதனையடுத்து 12 ராசிக்கு உண்டான பரிகாரங்களை பற்றி விரிவாக பார்போம். 

gurupeyerchikk

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் ராகு திசை நடைபெறுகிறதோ அவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மனை வாழிபாடு செய்வதும் யாருக்கெல்லாம் குரு திசை நடைபெறுகிறதோ அவர்கள் திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் ராகு திசை நடைபெறுகிறதோ அவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வாழிபாடு செய்வதும், யாருக்கெல்லாம் குரு திசை நடைபெறுகிறதோ அவர்கள் திருச்செந்தூர் அல்லது ஆலங்குடி சென்று சுவாமியை தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறலாம்.

gurupeyerchill

மிதுனம்: 

மிதுன ராசியில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் ராகு திசை நடைபெறுகிறதோ அவர்கள் ஆந்திர மாநிலம் திருகாளகஸ்தி சென்று வாழிபாடு செய்வதும், யாருக்கெல்லாம் குரு திசை நடைபெறுகிறதோ அவர்கள் சுவாமிமலை சென்று சுவாமியை தரிசனம் செய்வதும்,யாருக்கெல்லாம் சனி திசை நடைபெறுகிறதோ அவர்கள் திருக்கொள்ளிகாடு சென்று சுவாமியை வழிபாடு செய்துவர உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சுவாமிமலை முருகன் கோயிலுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் சென்று வர இந்த குரு பெயர்ச்சியில் சகல நன்மைகளையும் பெறலாம்.

gurupeyerchikkdk

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அருகில் உள்ள ஹயகிரிவர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் பழநி மலை முருகப்பெருமானையும்,திருச்செந்தூர் முருக பெருமானையும்  தரிசனம் செய்துவர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

gurupeyerchikl

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களில் குருவாயூர் சென்று கிருஷ்ணனை வாழிபாடு செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் திங்கள் கிழமையில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவதால் நினைத்த காரியம் கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

gurupeyerchikkl

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்கள் காஞ்சிபுரம் காமட்சி அம்மனையும், ஏகாம்பரேஸ்வரரையும், சித்திரகுப்தனையும் தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

மகரம் :

மகர ராசியில் பிறந்தவர்களில் குரு திசை நடப்பவர்கள் திருச்செந்தூர் முருகனையும், ராகு திசை நடப்பவர்கள் துர்க்கை அம்மனையும்,சனி திசை நடப்பவர்கள் திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

 

gurupeyerchibhjkjk

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியை தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதரையும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியையும் தரிசனம் செய்துவர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.