குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை : அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம் !

 

குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை : அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம் !

எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். அதனால் தான் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறினார்.

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், இரண்டாகப் பிரிந்த அதிமுகவை நான் தான் ஒன்று சேர்த்தேன் என்றும் எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். அதனால் தான் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறினார்.

gurumoorathy

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளார். 

mini

அதனைத் தொடர்ந்து ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதா அம்மாவும் சினிமா துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். அரசியலிலும் வெற்றி பெற்றார்கள். ஆனால், ரஜினியும் கமலும் பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும் அரசியலைப் பொறுத்த வரை ஜொலிக்காத நட்சத்திரங்கள் தான். கமல் கட்சி ஆரம்பித்து அவருக்கு வந்த நிலை தான் ரஜினிக்கும் வரும் என்று தெரிவித்துள்ளார்.