குரங்கு மாதிரி ஜெயிலுக்குள் இருந்து சண்டையை வேடிக்கை பார்க்கும் கஸ்தூரி!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாகவே போர் அடித்து வருவதாக ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்தனர். அதனால் ஆட்டத்தை மீண்டும் விறுவிறுப்பாக பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் என்ற பெயரில் மீண்டும் வனிதாவை வீட்டிற்குள் அனுப்பி கலவரத்தை உண்டுபடுத்தியுள்ளது. நேற்றைய எபிசோடில் முகன், அபிராமி இடையே சண்டை மூடிவிட்டு வீட்டையே இரண்டு ஆக்கி விட்டார்.
இந்த நிலையில் இன்றைக்கு வெளியான புரோமோவில் இருந்து மதுமிதா இங்கு இருக்கும் ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், பயன் படுத்திக்கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு வைத்தார். தற்போது இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கவின், மதுமிதா மீண்டும் மீண்டும் தனது பழைய காதல் குறித்துக் குத்திக்காட்டுவதை நினைத்து அழூவது போல் காட்டப்பட்டுள்ளது.
#Day52 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/H1NCEgHZ00
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019
அப்போது சாண்டி, ‘மதுமிதாவிற்கு கேப்டன் டாஸ்க் சமயத்தில் அடிப்படுகிறது என்பதற்காக நான் விட்டுக்கொடுத்தேன். அப்போ’ல தெரியலையா?’ என்று ஜெயிலில் இருக்கும் கஸ்தூரியிடம் சொல்லியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க கஸ்தூரி ஜெயிலில் இருப்பதைக் கண்ட ரசிகர்கள், ‘குரங்கள் போல் ஏன் அவர் அமர்ந்துள்ளார்? என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.