குரங்கிடம் செக்ஸ் சீண்டல்: 25 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

குரங்கிடம் செக்ஸ் சீண்டல்:  25 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள்  சிறை தண்டனை!

நைல்:  குரங்கிடம் பெண் ஒருவர் செக்ஸ் சீண்டலில் ஈடுபட்டதால் அவருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எகிப்து நாட்டின் நைல் நகரில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடையில், குரங்கிடம் பெண் ஒருவர் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. குரங்கைப் பார்த்து ரசித்து விளையாடும் பெண், அதன் பிறப்புறுப்பை சீண்டி தொல்லை தரும் காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தது.

இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், வீடியோவில் இருந்த பஸ்மா அஹமது என்ற 25 வயது பெண்ணை கைது செய்தனர். அவர் 15 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பஸ்மா அஹமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட வீடியோ பஸ்மாவின் நண்பர் ஒருவரால் எடுக்கப்பட்டதும், விளையாட்டாக அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.