‘குயீன்’ பட இயக்குநர் மீது நடிகை கங்கனா ரனாவத் பாலியல் புகார்!

 

‘குயீன்’ பட இயக்குநர் மீது நடிகை கங்கனா ரனாவத் பாலியல் புகார்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ‘குயீன்’ பட இயக்குநர் விகாஸ் பாஹல் மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ‘குயீன்’ பட இயக்குநர் விகாஸ் பாஹல் மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனுஸ்ரீயை தொடர்ந்து கங்கனா ரனாவத்தும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

tanushree

’பாம்பே வெல்வெட்’ படத்தின் புரொமோஷனின் போது, விகாஸ் தனக்கு பாலியல் புகார் அளித்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். ஆனால் அந்த விவகாரம் பெரிதாகவில்லை. இந்நிலையில், தனுஸ்ரீயின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, நடிகை கங்கனா ரனாவத் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

kangana

அந்த பெண் கூறியது சரி தான், கடந்த 2014ம் ஆண்டு ‘குயீன்’ படத்தில் நடித்தபோது, இயக்குநர் விகாஸ் பாஹல் என்னிடமும் தவறாக நடந்துக் கொண்டார். இருவரும் சந்திக்கும்போது கட்டிக் கொள்வது வழக்கம். ஆனால், விகாஸ் தன் முகத்தை எனது கழுத்தில் புதைத்துக் கொண்டு, இருக்கமாக கட்டிப்பிடிப்பார். என் முடியை முகர்வார் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

vikasbahl

குயீன் பட ஷூட்டிங்கின்போது தினசரி பார்ட்டி நடக்கும். திருமணமான புதிதிலும் கூட விகாஸ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தருடன் பார்ட்டி பண்ணுவார். நான் சீக்கிரமே தூங்கப்போனால் என்னை கேவலப்படுத்துவார் என கங்கனா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனுராக் கஷ்யப், மது மன்டேனா, விகாஸ் பாஹல், விக்ரமாதித்யா மோத்வானே ஆகியோர் கூட்டணியில் உள்ள ‘ஃபாந்தம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கலைக்கப்படுவதாக அதன் மற்ற உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ‘ஃபாந்தம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் இறுதியாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹ்ரித்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’.

manikarnika

ஹ்ரித்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ திரைப்படமும் கங்கனா ரனாவத்தின் ‘மணிகர்னிக்கா’ திரைப்படமும் அடுத்த ஆண்டு ஜன.25ம் தேதி ஒரே நாளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.