கும்பகோணம் பெரிய கடைத்தெரு, சண்முகம் தெரு உள்ளிட்ட 12 தெருக்களுக்கு சீல்

 

கும்பகோணம் பெரிய கடைத்தெரு, சண்முகம் தெரு உள்ளிட்ட 12 தெருக்களுக்கு சீல்

இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 495 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இதனைத்  தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 495 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இதனைத்  தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

coronavirus

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து பூஜ்ய நிலையை அடையும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி,தெரிவித்துள்ளார். இந்நிலையில் 
கும்பகோணம் மற்றும் பாபநாசத்தில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரானோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் நகரில் முக்கிய வணிக பகுதிகளான பெரிய கடைத்தெரு , சண்முகம் தெரு , ஆழ்வான் கோவில் தெரு, உள்ளிட்ட 12 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.