கும்பகோணத்தில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி

 

கும்பகோணத்தில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கும்பகோணம்:

நாகேஸ்வரன் கோயிலில்ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30-ந் தேதி காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது வழக்கம்.

kumbakonam

மயிலாடுதுறை துலா கட்டம், கும்பகோணம் பகவத் படித்துறை, ராமேஸ்வரம் தீர்த்த கட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் .

இத்தகைய கடைமுழுக்கு தீர்த்தவாரி மிகவும் புகழ்பெற்றது. சிறப்பு பெற்ற ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள  நாகேஸ்வரன் கோயிலில் நடைபெற்றது.

kumbakonam

இதையொட்டி கோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வர சாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

அதன் பின்னர் பகல் 12 மணிக்கு காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் அஸ்திர தேவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

theerthavari

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் வைக்கப்பட்டு,இரவு மின்னொளி அலங்காரத்தில் வீதிஉலாவாக வந்து கோயிலை சென்றடைந்தது.