கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் சாணி குண்டம் இறங்கும் விநோத திருவிழா!

 

கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் சாணி குண்டம் இறங்கும் விநோத திருவிழா!

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் சாணி  குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்துள்ளது கும்டாபுரம் மலைக்கிராமம். இங்கு பீரேஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சாணியடி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த 3-வது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெறுகிறது. அதன்படி நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. 

saanam

அதைத்தொடர்ந்து சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்க்குளத்துக்கு பூசாரி தலைமையில் பக்தர்கள் சாமியை அழைத்து வந்து வழிபாடு செய்தனர். சாமியை ஒரு கழுதை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .அங்கிருந்து கோவிலுக்கு பின்புறம் சென்ற பூசாரி, அங்கு குவிக்கப்பட்டு இருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

 அதைத்தொடர்ந்து சாணியடி திருவிழா தொடங்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குவித்து வைத்திருந்த சாணியை கைகளில் எடுத்து உருட்டி சிறு உருண்டைகளாக செய்து ஒருவர் மற்றவர் மீது வீசினார்கள். குவித்திருந்த சாணம் முடியும் வரை இவ்வாறு சாணியை அடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

saanam

அப்போது கூடி இருந்த பெண்கள் கைகளை தட்டி சாணி எறியும் பக்தர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்னர் பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து பீரேஸ்வர சாமியை வழிபட்டனர்.இதனைஅடுத்து சாணி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சாணியடி விழா முடிந்ததும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சாணிகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் சேகரித்து தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றனர்.விழாவை முன்னிட்டு கும்டாபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.