குமரி கடல் பகுதியில் உருவாகும் புதிய புயல்!  

 

குமரி கடல் பகுதியில் உருவாகும் புதிய புயல்!  

அரபிக் கடலில் ஏற்கெனவே கியார் என்ற புயல் உருவான நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் வரும் புதன்கிழமை உருவாகிறது.

அரபிக் கடலில் ஏற்கெனவே கியார் என்ற புயல் உருவான நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் வரும் புதன்கிழமை உருவாகிறது.

கியார் புயல் நேற்று மாலை கிழக்கு மத்திய அரபிக் கடலில் தீவிர புயலாக மாறியது. இதனால் கர்நாடகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை  அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால்  கன்னியாகுமரி பகுதி அருகே வரும் புதன்கிழமை மீண்டும் ஒரு புதிய புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கியார் புயல் பயணிக்கும் அதே பாதையில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

strom

இதனையடுத்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறுவுறுத்தியுள்ளனர்.