குப்பைகளை அகற்றவும், தூர் வாரவும் ரூபாய் 7.65 கோடி நிதி ஒதுக்கீடு! பருவமழைக்காக தமிழக அரசு திட்டம்!
Sep 15, 2019, 15:19 IST1568540946000
தமிழக மக்களை வாட்டி வதைத்து கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்திய கோடை வெயில் தணிந்து, தற்போது வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 51 இடங்களை தேர்வு செய்து அங்குள்ள குப்பைகளை அகற்றுதல், மிதக்கும் திடக்கழிவுகளை தூர் வாருதல், அடைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஈடுபடுமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
பருவமழைக் காலங்களில் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், பேரிடர்களை எதிர்கொள்வதற்காகவும், தூர் வாருவதற்காகவும் தமிழக அரசு 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. பருவ மழைக்கு முன்பாக பணிகளை முடிக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.