குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக-வால் முடியாது: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

 

குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக-வால் முடியாது: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

எந்த குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக கட்சியால் காலூன்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி: எந்த குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக கட்சியால் காலூன்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் தோழமைக்கட்சிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதால் தமிழகம் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவும், தமிழகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தை தடுக்கவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அரசியல் நோக்கத்திற்காக நடத்தவில்லை. மேகதாது அணையை தடுப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சட்டமன்ற கூட்டதை கூட்ட வேண்டும்.

மத்திய அரசின் இந்த செயற்கையான சதியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியையும் மன்னிக்கமாட்டார்கள். பாஜக எந்த குட்டிக்கரணம் போட்டாலும் அந்த கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.