குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் குற்றவாளி இல்லை: ஜெயக்குமார்

 

குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் குற்றவாளி இல்லை: ஜெயக்குமார்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இருப்பதால் அவர் குற்றவாளி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இருப்பதால் அவர் குற்றவாளி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தனது விசாரணையை தொடங்கிய சிபிஐ, நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து ஆஜரான விஜயபாஸ்கரிடம் தொடர்ந்து இரண்டு நாட்கள் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், குற்றவாளியை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஒரு வழக்கில் சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய வி‌ஷயம் அல்ல. சம்மன் அனுப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என்றார்.