குடும்ப தகறாரில் மனைவி தீக்குளித்து தற்கொலை.. துக்கம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை முயற்சி!

 

குடும்ப தகறாரில் மனைவி தீக்குளித்து தற்கொலை.. துக்கம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை முயற்சி!

அந்த சவாரி மூலம் ஊரடங்கு காலத்தை நாம் சமாளிக்க வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

சென்னை மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வந்த தம்பதி தாமஸ்(32) மற்றும் எஸ்தர்(27). இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். தாமஸ் கார் டிரைவராக இருந்து வரும் நிலையில், ஊரடங்கால் அவர் எந்த சவாரிக்கும் செல்லவில்லையாம். இந்நிலையில், நேற்று முன்தினம் தாமஸ் எஸ்தரிடம் மராட்டிய மாநிலம் செல்வதற்கு சவாரி ஒன்று கிடைத்திருப்பதாகவும், அந்த சவாரி மூலம் ஊரடங்கு காலத்தை நாம் சமாளிக்க வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

ttn

ஆனால் அதற்கு எஸ்தர், இப்போது அங்கு செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதால், விரக்தி அடைந்த எஸ்தர் அருகில் இருந்த டீசலை எடுத்து ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ttn

அவரின் அலறல் சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த தாமஸ், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் எஸ்தர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்ததால் மனமுடைந்த தாமஸ், அவரது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். சரியாக அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு சென்ற உறவினர்கள், தாமஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.